தூயன் Writer
  • Author

Author

April 27, 2024 / thuyan / 0 Comments

தூயன் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரிமளம் என்ற ஊரில் ராணி, முனுசாமி தம்பதியினருக்கு மே 16, 1986 அன்று மகனாகப் பிறந்தார். சகோதரி நிலா. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். கிண்டி கிங் அரசு ஆய்வுக்கூட கல்லூரியில் தொழிற்கல்வியும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுநிலை நுண்ணுயிரியலிலும் பட்டம் பெற்றார். தூயன் ஜூன் 2014-ல் பவித்ராவை மணந்தார். இவர்களுக்கு லெவின் என்னும் மகனும் இதா என்னும் மகளும் உள்ளனர். தற்போது புதுக்கோட்டை ESI மருத்துவமனை …

Continue reading “Author”

  • கட்டுரைகள்

வன்புணர்வுக் காணொளிகள் மூலம் சம்பாதிக்க நிறுவனங்கள் எப்படி அனுமதிக்கப்படுகின்றன?

April 27, 2024 / thuyan / 0 Comments

நிக்கோலஸ் கிறிஸ்டோஃப் மொழிபெயர்ப்புக் கட்டுரை பல பாலியல் காணொளிகள் அவர்களது சம்மதத்துடன் எடுக்கப்படவில்லை என்பதுதான் பிரச்சினை. வெறும் 14 வயதே ஆன ஒரு சிறுமியை ஒருவன் ஸ்கைப்பில் சில்மிஷ விளையாட்டில் ஈடுபடுத்துகிறான். ரகசியமாக அதைப் பதிவுசெய்கிறான். அந்தக் காணொளி அவளுடைய முழுப் பெயருடன், உலகின் அனைவராலும் பார்க்கப்படும் பாலியல் தளத்தில் பதிவேற்றப்படுகிறது. இவ்விதமான சட்ட விரோத, குழந்தை வன்புணர்வுக் காட்சிகள்கூட கூகுள் தேடலில் எளிதாகக் கிடைக்கின்றன. கனடாவைச் சேர்ந்த ஒரு சிறுமியின் கதை இது. அந்தச் சிறுமி குறிப்பிட்ட …

Continue reading “வன்புணர்வுக் காணொளிகள் மூலம் சம்பாதிக்க நிறுவனங்கள் எப்படி அனுமதிக்கப்படுகின்றன?”

  • கட்டுரைகள்

நாவல் எனும் கலை வடிவம்

March 15, 2024 / thuyan / 0 Comments

(25.2.24 அன்று ஏலகிரி மலையில் புரவி இலக்கியக் கூடுகை நடத்திய இரண்டு நாள் உரையாடல் நிகழ்வில் வாசித்தக் கட்டுரையின் எழுத்து வடிவம்) நாவல் எனும் கலை வடிவம் தூயன் “பிரபஞ்சத்தையும் அதன் மதிப்புகளின் வரிசையையும், நன்மையையும் தீமையையும் வேறுபடுத்தி, ஒவ்வொரு பொருளையும் அர்த்தப்படுத்திய இடத்திலிருந்து கடவுள் மெதுவாக வெளியேறியதும், டான் தனது வீட்டை விட்டு, அடையாளம் காண முடியாத ஒரு உலகத்திற்குப் புறப்பட்டார்.“ –  மிலன் குந்தேரா. வாழ்க்கையும் இலக்கியமும் இரண்டும் இரண்டும்தான் (வேறு வேறு). இரண்டும் …

Continue reading “நாவல் எனும் கலை வடிவம்“

  • கட்டுரைகள்

மௌனங்களை நாம்தான் உற்றுக்கேட்க வேண்டும்

March 15, 2024 / thuyan / 0 Comments

“I found it impossible to decide which of the two countries was now my homeland“ – Manto இந்தியப் பிரிவினைப் பற்றி பலவிதமான ஆவணங்களும் நூல்களும் திரைப்படங்களும் நம்மிடம் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஏதோவொரு விதத்தில் பிரிவினையின் சாட்சியங்களை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளன. இவற்றுக்கும் ஊர்வசி புட்டாலியாவின் தி அதர் சைட் ஆஃப் சைலன்ஸ் (The other side of silence) மற்றும் ரிதுமேனனும் கமலாபாசினும் எழுதிய பார்டர் அன்ட் பௌன்டரிஸ் (Borders …

Continue reading “மௌனங்களை நாம்தான் உற்றுக்கேட்க வேண்டும்”

  • English

100th death of Priest Francis Xavier

February 8, 2024 / thuyan / 0 Comments

Translated from Tamil by Santhinindevi Francis Xavier did not expect to approach a hundred deaths so soon. His prediction was that once he reached one hundred deaths, he would be seventy-five years old, and he had decided to escape the tedious fate of sending souls to the heavenly kingdom. But counting of deaths surpass age. …

Continue reading “100th death of Priest Francis Xavier”

  • சிறுகதைகள்

ஃபாதர் ப்ரான்ஸிஸ் சேவியரின் நூறாவது மரணம்

September 14, 2023 / thuyan / 0 Comments

Published in Puthuezhuthu July 2023 இவ்வளவு சீக்கிரம் நூறு மரணங்களை நெருங்கிவிடும் என்று பிரான்ஸிஸ் சேவியர் எதிர்பார்க்கவில்லை. அவருடைய கணிப்பு, நூறைத் தொட்டதும் அதாவது, அதற்குள் தனக்கும் அகவை எழுபத்தி ஐந்தை சமீபித்துவிடும் அத்துடன் இனி ஆத்மாக்களை பரலோக ராஜ்யத்திற்கு அனுப்பி வைக்கும் இந்த அலுப்பூட்டும் விதியிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தார். வயது, மரணம் இரண்டில் மரணம் எண்ணிக்கையில் முந்திவிட்டது. எழுபத்திஐந்துக்கு இன்னும் மூன்று வருடங்கள் இருக்கின்றன அதுவரை எத்தனை மரணங்களுக்காக் காத்திருக்க வேண்டும் என்பதுதான் …

Continue reading “ஃபாதர் ப்ரான்ஸிஸ் சேவியரின் நூறாவது மரணம்”

  • சிறுகதைகள்

அநுபந்தம், ஆபரணம் மற்றும் விதி

September 14, 2023 / thuyan / 0 Comments

Published in Manal Veedu jan 2023 அநுபந்து விதியின் கையில் விழுவதற்கு முன்பே இறந்துவிட்டார். லதா சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை. விதி அவரைக் கொன்றதாகத்தான் ஊரில் நாங்கள் அனைவரும் நம்பினோம். விதி அநுபந்தைச் சந்திப்பதற்கும் அநுபந்து இறப்பதற்கும் இடைப்பட்ட கால இடைவெளி ஒரு நாள் பொழுது. அந்த ஒரு நாள் பொழுது முழுக்க விதி அவருடன் இருந்துள்ளது. விதி அவர் இறப்பதற்காகக் காத்திருந்ததா? அநுபந்து இறந்துவிடுவாரென்று எனக்கும் தெரியாது. ஆனால்,  அன்னைக்கு ஏதோ நடக்கப் …

Continue reading “அநுபந்தம், ஆபரணம் மற்றும் விதி”

  • கட்டுரைகள்

மூளை எனும் காலனிய அரசு

October 5, 2022 / thuyan / 0 Comments

டேவிட் ஈகிள் மேனின்  Livewired- Inside Story of Ever-changing Brain தனது எல்லையை வகுத்துக்கொள்ளவும் இருப்பைக் காப்பாற்றிக்கொள்ளவும் மனிதன்  நடத்திக்கொண்டிருக்கும் போரட்டத்தைத்தான் மூளைக்குள் நியூரான்கள் நடத்துகின்றன.  ஒரு நாடு அல்லது நகரம் தன்னைச் சுற்றி நடக்கும் போராட்டங்களிலிருந்து காப்பாற்றிக்கொண்டு (எதிர்த்து சண்டையிடுவதும்) அழிவிலிருந்து தன்னை மீள் உருவாக்கம் செய்து கொள்வதை நாம் பார்ப்பதுதான் நம்மால்  பார்க்கமுடியாத மூளையின் செயல்பாடு. டேவிட் ஈகிள்மேனின் சமீபத்திய லைவ்வயர்ட்(Livewired) புத்தகம் மூளைப் பற்றிய அறிவியலை இப்படித்தான் தொடங்குகிறது. “படைப்புத்திறன் என்பது …

Continue reading “மூளை எனும் காலனிய அரசு”

  • புத்தகங்கள்

நாவல்

September 27, 2022 / thuyan / 0 Comments

கதீட்ரல்- நாவல்- வெளியீடு – காலச்சுவடு

  • புத்தகங்கள்

இருமுனை

September 27, 2022 / thuyan / 0 Comments

சிறுகதை தொகுப்பு

Posts navigation

1 2 … 4 Next

Recent Posts

  • Author
  • வன்புணர்வுக் காணொளிகள் மூலம் சம்பாதிக்க நிறுவனங்கள் எப்படி அனுமதிக்கப்படுகின்றன?
  • நாவல் எனும் கலை வடிவம்
  • மௌனங்களை நாம்தான் உற்றுக்கேட்க வேண்டும்
  • 100th death of Priest Francis Xavier

Recent Comments

  • சா.ரு.மணிவில்லன். on ஓநாய் குலச்சின்னம் – அழிந்த தொன்மை கலாச்சாரத்தின் சிற்பம்..
  • தூயனின் இரு கதைகள் – கடலூர் சீனு on முகம்
  • SHAN Nalliah on இன்னொருவன்

Archives

  • April 2024
  • March 2024
  • February 2024
  • September 2023
  • October 2022
  • September 2022
  • December 2021
  • February 2018
  • December 2017
  • November 2017

Categories

  • Author
  • English
  • கட்டுரைகள்
  • குறுநாவல்
  • சிறுகதைகள்
  • புத்தகங்கள்
  • மதிப்புரைகள்
  • மொழிபெயர்ப்புகள்

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

Theme by The WP Club | Proudly powered by WordPress