தூயன் வலைத்தளம்
  • மதிப்புரைகள்

‘பாகீரதியின் மதியம்’ நாவல் ஓா் உளப்பகுப்பாய்வில்…..

December 2, 2017 / thuyan / 0 Comments

பா. வெங்கடேசனின் பாகீரதியின் மதியம் நாவல் மீதான வாசகனின் உளப்பகுப்பாய்வு பார்வை பெரும் வனத்தினுள்ளே நான் பயணிக்கிறேன். முதலில் எனக்கு எவ்வித பாதையுமே புலப்படவில்லை. நானாக எனக்கு உகந்தவகையில் ஒரு பாதையொன்றை உருவாக்கி நடக்க முயல்கிறேன். இப்போது பாதை என்னை அழைத்து செல்கிறது. அதற்கு நான் செல்லும் திசை தெரியாது ஆனால் வழி என்கிற தூல ஒன்றைக் எனக்க காட்ட வேண்டுமென்கிற கட்டாயம் மட்டும் அதற்கு உண்டு. ஆனால் நான் பாதையின் வழியில் செல்ல மறுத்து புதிய …

Continue reading “‘பாகீரதியின் மதியம்’ நாவல் ஓா் உளப்பகுப்பாய்வில்…..”

  • மதிப்புரைகள்

தற்காலச் சிறுகதைகளைப் பற்றிய ஓா் உரையாடல்…

December 2, 2017 / thuyan / 0 Comments

தற்காலச் சிறுகதைகளைப் பற்றிய ஓா் உரையாடல்… ; தமிழ்க் கலைச் சாதனங்களில் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், திரைப்படம், ஓவியம் ஆகிய ஊடகங்களில் சிறுகதை மட்டுமே அதைக் கைக்கொள்ள முனையும் படைப்பாளிக்கு மிகப் பெரிய சவாலை முன்னிருத்தும் பிரம்மாண்டமான பரப்பைத் தன் ராஜ்யமாகக் கொண்டிருக்கிறது. புதுமைப்பித்தனும் மௌனியும் பேருருவச் சிலைகளென விகாசம் பெற்று வீற்றிருக்கும் பரப்பு இது. தன் காலத்துக்கான கனவைப் படைப்பாக்கத்தில் கைப்பற்ற விழையும் படைப்பாளிக்கு இந்த அகன்ற வெளி பிரமிப்பும் உத்வேகமும் ஊட்டும் ஒரு …

Continue reading “தற்காலச் சிறுகதைகளைப் பற்றிய ஓா் உரையாடல்…”

  • மதிப்புரைகள்

தஞ்சைப்ரகாஷின் கள்ளம்

December 2, 2017 / thuyan / 0 Comments

தஞ்சைப்ரகாஷின் கள்ளம் பிரக்ஞையை இயக்கும் ஆதார சக்தியான ஆசாபாசங்களில் காமத்திற்கு முதல் இடம் உண்டு. காமம் தன் இருப்பினை எவ்வித சமரசமமுமின்றி நிறைத்துக்கொள்ளும்போது அதன் ஆற்றல், பிரக்ஞையினுள் புதிய பாய்ச்சலை நிகழ்த்தி தன் ஆகிருதியை வெளியிடுகிறது. அவ்வாறு வெளிப்படும் ஆற்றல் முனங்கிக்கிடக்கும் படைப்புணர்வைத் தூண்டி ஒளிப்பாச்சலை நிகழ்த்தவல்லது. அதுவொரு பசி. ஆம் புலன்கள் ஒவ்வொன்றுமே நுண்ணிய உயிரிகளால் பின்னப்பட்ட ஒரு பெரும் அடிமைச் சமூகம் இல்லையா? உணர்களில் உருவாகும் வறட்சி சிறுக சிறுக வழு விழந்து மூளையின் …

Continue reading “தஞ்சைப்ரகாஷின் கள்ளம்”

  • மதிப்புரைகள்

ஜீவகரிகாலனின் ‘ட்ரங்கு பெட்டிக் கதைகள்’

December 2, 2017 / thuyan / 0 Comments

ஜீவகரிகாலனின் ‘ட்ரங்கு பெட்டிக் கதைகள்’- விமர்சகனின் பார்வை சிறுகதைக்கென்ற செவ்வியல் வடிவம் ஒன்றை நம் இலக்கிய மரபு உருவாக்கிவிட்டிருக்கிறதென்பதால் இங்கு எழுதப்படும் கதைகள் அதனுள் தான் தன் ஆகிருதியை நிரூபிக்க வேண்டியுள்ளது. எப்படியோ அவ்வடிவ குறுக்கீடும் படைப்பாளிக்கு சவாலையே அளிக்கிறது. இது வாசகனுக்கும் ஒருவகையில் வசதித்தன்மை. ஆக படைப்பாளி, வாசகன் என இருவரும் ஆடும் செஸ் விளையாட்டாகச் சிறுகதையைக் குறிப்பிடலாம். செஸ் விளையாட்டை உதாரணமாக எடுத்துக்கொள்வதுதான் தற்போதைக்கு சரியானது என்று நம்புகிறேன். எதிரே அமர்ந்திருப்பவனின் எண்ணங்களை கிரகித்துக்கொண்டு …

Continue reading “ஜீவகரிகாலனின் ‘ட்ரங்கு பெட்டிக் கதைகள்’”

  • மதிப்புரைகள்

பா. வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’

December 2, 2017 / thuyan / 0 Comments

இறந்துபோன நிலங்கள் சொல்லும் அந்நிலங்களின் கதை பா. வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’ குறித்த விமர்சனம்.….. மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே அவனின் நிலத்திற்கான வரலாறும் தொடங்கிவிடுகிறது. ஒவ்வொரு சமூகமும் தோன்றுவதும் அவை தங்களுக்கு ஆதாரமான இருப்பை அமைத்துக்கொள்வதும் நிகழ்ந்துகொண்டேயிருக்கும் காலமாற்றங்கிளிலொன்று. ஆதியிலிருந்து மனிதன் தனக்கு தேவையானவற்றை தன் அடிமைத்தனத்திற்குள் கொண்டுவருவதும் அல்லது அதனை அழித்தொதுக்குவதையும் செய்ய முனைகிறான். பின் கொஞ்சம் கொஞ்சமாக அவன் சமூகளவில் பரிணாமம் அடையப்பெற்று பிறகு அவனின் சிந்தனையிலும் மாறுபாடு அடைகிறான். அதன்பின் மன்னராட்சி, நிலபிரபுத்துவம், …

Continue reading “பா. வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’”

  • மதிப்புரைகள்

ஜே.ஜே சில குறிப்புகள் – வாசிப்பனுவம்

December 2, 2017 / thuyan / 0 Comments

ஜே.ஜே சில குறிப்புகள் – வாசிப்பனுவம் தமிழில் முதல் நவீனத்துவம் என்ற சிறப்புக்குரிய இந்நாவல் வெளிவந்தது 1981 ம் ஆண்டு. இன்று முப்பத்தைந்தாண்டுகள் கடந்து விட்ட பின்பும் இதைப் பற்றி பேசிக்கொண்டிருப்பது ஒரு தவம் போன்றுள்ளது. நாவல் முழுக்கவே பேசப்படுவது தனி மனிதவாதத் தத்துவம். அது ஜே ஜே என்கிற பெயரில் சு.ராவின் சிந்தனையா அல்லது சி.ஜே தாமிஸின் (இங்கு சி.ஜே தான் ஜே ஜே என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது) சிந்தனையா என்ற தேடல் தீவிர இலக்கிய படித்தவர்களுக்குள் …

Continue reading “ஜே.ஜே சில குறிப்புகள் – வாசிப்பனுவம்”

  • மதிப்புரைகள்

ஓநாய் குலச்சின்னம் – அழிந்த தொன்மை கலாச்சாரத்தின் சிற்பம்..

December 2, 2017 / thuyan / 0 Comments

ஓநாய் குலச்சின்னம் – அழிந்த தொன்மை கலாச்சாரத்தின் சிற்பம்.. ஜியாங் ரோங்கின் ஓநாய் குலச்சின்னம் வாசிப்பதற்கு புதிய தரிசனத்தை திறந்துவிடக்கூடிய நாவல். தமிழில் சி. மோகன் மொழிபெயர்ப்பில் அதிர்வு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சீனாவில் மங்கோலிய மேய்ச்சல் நிலத்தின் சிதைவை ஆழ் மனதில் காட்டி அழிக்கின்றது. ஜியாங் ரோங்கின் முதல் நாவல். தன்னுடைய அறுபதாவது வயதில் இந்நாவலை படைத்துள்ளார். ஆனால் அதற்கு முன் தன் வாழ்நாள் முழுவதும் இதற்காக செலவிட்டுள்ளார். சீனாவில் உள் மங்கோலியாவின் கிழக்கு உஜ்ம்கியுன் பேனரில் …

Continue reading “ஓநாய் குலச்சின்னம் – அழிந்த தொன்மை கலாச்சாரத்தின் சிற்பம்..”

  • மதிப்புரைகள்

வா. மணிகண்டனின் மூன்றாம் நதி நாவல் குறித்து

December 2, 2017 / thuyan / 0 Comments

பெருநகரத்தின் குரூர முகம் வா. மணிகண்டனின் மூன்றாம் நதி நாவல் குறித்து ‘எந்த அயோக்கியன நம்பினா மேல்? தண்ணிக்காக ஊரையே பறக்க அடிச்சிட்டீங்’ –அசோகமித்திரனின் தண்ணீர் நாவலிலிருந்து பெருநாவல்கள் மட்டுமே வாசிப்பின் எல்லைகளையும் மனிதின் சித்திரங்களையும் கொடுக்குமென்றால் சிறிய நாவல்களிலும் அத்தகைய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. பக்க அளவில் ஒரு படைப்பபை பிரக்ஞை பூர்வமாக எதிர்கொள்வதில் சிக்கல்கள் இருக்கின்றன. டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ போன்ற நாவல்களை வாசிக்கின்ற அதே உத்வேகம் தான் ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’வையும் வாசிக்கின்றபோது …

Continue reading “வா. மணிகண்டனின் மூன்றாம் நதி நாவல் குறித்து”

  • சிறுகதைகள்

இன்னொருவன்

November 29, 2017 / thuyan / 1 Comment

இன்னொருவன் அமிர்தி ராஷன், அதுதான் அவனுடைய சரியான பெயர். ஆனால் எனக்கும் மேன்சனிலிருந்த எல்லோருக்கும் அமிட்டிராஸ் என்றுதான் அப்பெயர் வாயில் நுழைந்திருந்தது. அவன் ‘காணாமல்போவதற்கு’ முதல் நாள் தமிழ்நாட்டிற்கு இரயிலேறியிருக்கிறான். அவனைத் தவிர தன் ஊரிலுள்ள அனைவரும் அவன், காணாமல் போனதாகவே நம்பிக்கொண்டிருப்பதாகச் சொல்வான். “வழி தவறுதல் மட்டுமே காணாமல் போவதாக இங்கு நம்பப்படுகிறது. ஆனால் காணாமல் போவது ஓரு நித்ய யோகநிலை. உன்னோட இடத்தை நீ வெற்றிடமாக்கிவிட்டு வேறொரு இடத்துக்குப் போகும்போது கிடைக்கின்ற தனிமை அபூர்வமானது. …

Continue reading “இன்னொருவன்”

  • Uncategorized
  • சிறுகதைகள்

பிரக்ஞைக்கு அப்பால்….

November 29, 2017 / thuyan / 2 Comments

பிரக்ஞைக்கு அப்பால்…. ஓவியர் ஹரிதாஸை சித்தனவாசலில் சந்திக்கும்வரை ஆத்மநாமைப் பற்றி நான் எங்கும் கேள்விப்பட்டிருக்கவில்லை. அப்பெயரையே அன்றுதான் எனக்கு பரிட்சயம். ஓவியங்களுடனான என் துவந்தமும் அன்றிலிருந்தே துவங்கியது. இன்று, இந்திய ஓவியர்களின் அகவுலகம் சார்ந்து திரட்டப்பட்ட என் ஆராய்ச்சி நூலுக்கான உந்துதல் அச்சந்திப்பில்தான் முகிழ்ந்தது. தொண்ணுற்றியாறில் சித்தனவாசல் இப்போது நீங்கள் பார்ப்பதுபோல கருவேல மரங்கள் சூழ்ந்த வனமாகவும் கிரஷர் லாரிகளின் ஓயாத இரைச்சலினூடே ஒரு முள்ளெலி போல தன்னை ஒடுங்கிக் கொண்டிருக்கவில்லை. வில்வ மரங்களும் பொருசியும் மண்டிய …

Continue reading “பிரக்ஞைக்கு அப்பால்….”

Posts navigation

Previous 1 2 3 Next

Recent Posts

  • கட்டுரை
  • கட்டுரை
  • கட்டுரை
  • சுவா்களின் ஊடே- Etger keret
  • நடைபாதை- Etger keret

Recent Comments

  • தூயனின் இரு கதைகள் – கடலூர் சீனு on முகம்
  • SHAN Nalliah on இன்னொருவன்
  • santhini on பிரக்ஞைக்கு அப்பால்….
  • santhini on பிரக்ஞைக்கு அப்பால்….

Archives

  • December 2021
  • February 2018
  • December 2017
  • November 2017

Categories

  • Uncategorized
  • குறுநாவல்
  • சிறுகதைகள்
  • மதிப்புரைகள்
  • மொழிபெயர்ப்புகள்

Meta

  • Register
  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

Theme by The WP Club | Proudly powered by WordPress