தூயன் Writer
  • சிறுகதைகள்

டார்வினின் வால்

February 24, 2018 / thuyan / 0 Comments

டார்வினின் வால் கிறிஸ்டி அவன் அருகே வந்து “ஒரு பெயர் வைக்கலாமா?” என்றபோது அவன் ஏதும் பேசாமல் அவள் கண்களையே பார்த்தான். அக்கண்களிலிருக்கும் குழந்தைமை அவனுக்கு எப்போதும் ஆசுவாசமளிக்கும். “சொல்லுங்க அங்கிள் என்ன பெயர்” என்றாள் மறுபடியும் அழுத்தமாக. பிறகு அவளே ஒருகணம் யோசிப்பது போல பாவனைக் காட்டி “டார்வின்” என்றாள். அவன் ஆச்சர்யமாக நிமிர்ந்தான். எதற்காக அப்பெயரை தேர்ந்தெடுத்தாளெனக் கேட்கத் தோன்றவில்லை. ஏதோவொரு வகையில் ஒரு அடையாளத்திற்கு அப்போதைக்கு அப்பெயர் தேவையாகத்தான் பட்டது. இதில் ஆச்சர்யம் …

Continue reading “டார்வினின் வால்”

  • மதிப்புரைகள்

சுரேஷ் பிரதிப்பின் ஒளிர் நிழல்

December 15, 2017 / thuyan / 0 Comments

சுரேஷ் பிரதிப்பின் ஒளிர் நிழல் நாவல் எப்போதுமில்லாமல் சென்ற வருடம் தான் தமிழில் நிறையப் படைப்புகள் வெளிவந்ததும் பேசப்பட்டதும் நிகழ்ந்திருக்கிறது என்று எண்ணுகிறேன். இதற்கு முக்கியக் காரணம் இணையத்த்துடன் நாம் எல்லாம் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளோம் என்பதே. ஒருபக்கம் நிறைய வாட்ஸ் அப் குழுக்கல் உருவாகி, நுால்குறித்து விவாதிப்பதும் பின் சண்டையிட்டு வெளியேறுவதும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒருகட்டத்திற்கு மேல் எழுத முடியாமல், வெறும் ஆடியோ மெசஜில் திட்டிக்கொண்டதும் உண்டு. இக்கருவிகள் எல்லாம் ஒரு நல்ல படைப்பை எப்படியோ …

Continue reading “சுரேஷ் பிரதிப்பின் ஒளிர் நிழல்”

  • மதிப்புரைகள்

‘பாகீரதியின் மதியம்’ நாவல் ஓா் உளப்பகுப்பாய்வில்…..

December 2, 2017 / thuyan / 0 Comments

பா. வெங்கடேசனின் பாகீரதியின் மதியம் நாவல் மீதான வாசகனின் உளப்பகுப்பாய்வு பார்வை பெரும் வனத்தினுள்ளே நான் பயணிக்கிறேன். முதலில் எனக்கு எவ்வித பாதையுமே புலப்படவில்லை. நானாக எனக்கு உகந்தவகையில் ஒரு பாதையொன்றை உருவாக்கி நடக்க முயல்கிறேன். இப்போது பாதை என்னை அழைத்து செல்கிறது. அதற்கு நான் செல்லும் திசை தெரியாது ஆனால் வழி என்கிற தூல ஒன்றைக் எனக்க காட்ட வேண்டுமென்கிற கட்டாயம் மட்டும் அதற்கு உண்டு. ஆனால் நான் பாதையின் வழியில் செல்ல மறுத்து புதிய …

Continue reading “‘பாகீரதியின் மதியம்’ நாவல் ஓா் உளப்பகுப்பாய்வில்…..”

  • மதிப்புரைகள்

தற்காலச் சிறுகதைகளைப் பற்றிய ஓா் உரையாடல்…

December 2, 2017 / thuyan / 0 Comments

தற்காலச் சிறுகதைகளைப் பற்றிய ஓா் உரையாடல்… ; தமிழ்க் கலைச் சாதனங்களில் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், திரைப்படம், ஓவியம் ஆகிய ஊடகங்களில் சிறுகதை மட்டுமே அதைக் கைக்கொள்ள முனையும் படைப்பாளிக்கு மிகப் பெரிய சவாலை முன்னிருத்தும் பிரம்மாண்டமான பரப்பைத் தன் ராஜ்யமாகக் கொண்டிருக்கிறது. புதுமைப்பித்தனும் மௌனியும் பேருருவச் சிலைகளென விகாசம் பெற்று வீற்றிருக்கும் பரப்பு இது. தன் காலத்துக்கான கனவைப் படைப்பாக்கத்தில் கைப்பற்ற விழையும் படைப்பாளிக்கு இந்த அகன்ற வெளி பிரமிப்பும் உத்வேகமும் ஊட்டும் ஒரு …

Continue reading “தற்காலச் சிறுகதைகளைப் பற்றிய ஓா் உரையாடல்…”

  • மதிப்புரைகள்

தஞ்சைப்ரகாஷின் கள்ளம்

December 2, 2017 / thuyan / 0 Comments

தஞ்சைப்ரகாஷின் கள்ளம் பிரக்ஞையை இயக்கும் ஆதார சக்தியான ஆசாபாசங்களில் காமத்திற்கு முதல் இடம் உண்டு. காமம் தன் இருப்பினை எவ்வித சமரசமமுமின்றி நிறைத்துக்கொள்ளும்போது அதன் ஆற்றல், பிரக்ஞையினுள் புதிய பாய்ச்சலை நிகழ்த்தி தன் ஆகிருதியை வெளியிடுகிறது. அவ்வாறு வெளிப்படும் ஆற்றல் முனங்கிக்கிடக்கும் படைப்புணர்வைத் தூண்டி ஒளிப்பாச்சலை நிகழ்த்தவல்லது. அதுவொரு பசி. ஆம் புலன்கள் ஒவ்வொன்றுமே நுண்ணிய உயிரிகளால் பின்னப்பட்ட ஒரு பெரும் அடிமைச் சமூகம் இல்லையா? உணர்களில் உருவாகும் வறட்சி சிறுக சிறுக வழு விழந்து மூளையின் …

Continue reading “தஞ்சைப்ரகாஷின் கள்ளம்”

  • மதிப்புரைகள்

ஜீவகரிகாலனின் ‘ட்ரங்கு பெட்டிக் கதைகள்’

December 2, 2017 / thuyan / 0 Comments

ஜீவகரிகாலனின் ‘ட்ரங்கு பெட்டிக் கதைகள்’- விமர்சகனின் பார்வை சிறுகதைக்கென்ற செவ்வியல் வடிவம் ஒன்றை நம் இலக்கிய மரபு உருவாக்கிவிட்டிருக்கிறதென்பதால் இங்கு எழுதப்படும் கதைகள் அதனுள் தான் தன் ஆகிருதியை நிரூபிக்க வேண்டியுள்ளது. எப்படியோ அவ்வடிவ குறுக்கீடும் படைப்பாளிக்கு சவாலையே அளிக்கிறது. இது வாசகனுக்கும் ஒருவகையில் வசதித்தன்மை. ஆக படைப்பாளி, வாசகன் என இருவரும் ஆடும் செஸ் விளையாட்டாகச் சிறுகதையைக் குறிப்பிடலாம். செஸ் விளையாட்டை உதாரணமாக எடுத்துக்கொள்வதுதான் தற்போதைக்கு சரியானது என்று நம்புகிறேன். எதிரே அமர்ந்திருப்பவனின் எண்ணங்களை கிரகித்துக்கொண்டு …

Continue reading “ஜீவகரிகாலனின் ‘ட்ரங்கு பெட்டிக் கதைகள்’”

  • மதிப்புரைகள்

பா. வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’

December 2, 2017 / thuyan / 0 Comments

இறந்துபோன நிலங்கள் சொல்லும் அந்நிலங்களின் கதை பா. வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’ குறித்த விமர்சனம்.….. மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே அவனின் நிலத்திற்கான வரலாறும் தொடங்கிவிடுகிறது. ஒவ்வொரு சமூகமும் தோன்றுவதும் அவை தங்களுக்கு ஆதாரமான இருப்பை அமைத்துக்கொள்வதும் நிகழ்ந்துகொண்டேயிருக்கும் காலமாற்றங்கிளிலொன்று. ஆதியிலிருந்து மனிதன் தனக்கு தேவையானவற்றை தன் அடிமைத்தனத்திற்குள் கொண்டுவருவதும் அல்லது அதனை அழித்தொதுக்குவதையும் செய்ய முனைகிறான். பின் கொஞ்சம் கொஞ்சமாக அவன் சமூகளவில் பரிணாமம் அடையப்பெற்று பிறகு அவனின் சிந்தனையிலும் மாறுபாடு அடைகிறான். அதன்பின் மன்னராட்சி, நிலபிரபுத்துவம், …

Continue reading “பா. வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’”

  • மதிப்புரைகள்

ஜே.ஜே சில குறிப்புகள் – வாசிப்பனுவம்

December 2, 2017 / thuyan / 0 Comments

ஜே.ஜே சில குறிப்புகள் – வாசிப்பனுவம் தமிழில் முதல் நவீனத்துவம் என்ற சிறப்புக்குரிய இந்நாவல் வெளிவந்தது 1981 ம் ஆண்டு. இன்று முப்பத்தைந்தாண்டுகள் கடந்து விட்ட பின்பும் இதைப் பற்றி பேசிக்கொண்டிருப்பது ஒரு தவம் போன்றுள்ளது. நாவல் முழுக்கவே பேசப்படுவது தனி மனிதவாதத் தத்துவம். அது ஜே ஜே என்கிற பெயரில் சு.ராவின் சிந்தனையா அல்லது சி.ஜே தாமிஸின் (இங்கு சி.ஜே தான் ஜே ஜே என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது) சிந்தனையா என்ற தேடல் தீவிர இலக்கிய படித்தவர்களுக்குள் …

Continue reading “ஜே.ஜே சில குறிப்புகள் – வாசிப்பனுவம்”

  • மதிப்புரைகள்

ஓநாய் குலச்சின்னம் – அழிந்த தொன்மை கலாச்சாரத்தின் சிற்பம்..

December 2, 2017 / thuyan / 1 Comment

ஓநாய் குலச்சின்னம் – அழிந்த தொன்மை கலாச்சாரத்தின் சிற்பம்.. ஜியாங் ரோங்கின் ஓநாய் குலச்சின்னம் வாசிப்பதற்கு புதிய தரிசனத்தை திறந்துவிடக்கூடிய நாவல். தமிழில் சி. மோகன் மொழிபெயர்ப்பில் அதிர்வு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சீனாவில் மங்கோலிய மேய்ச்சல் நிலத்தின் சிதைவை ஆழ் மனதில் காட்டி அழிக்கின்றது. ஜியாங் ரோங்கின் முதல் நாவல். தன்னுடைய அறுபதாவது வயதில் இந்நாவலை படைத்துள்ளார். ஆனால் அதற்கு முன் தன் வாழ்நாள் முழுவதும் இதற்காக செலவிட்டுள்ளார். சீனாவில் உள் மங்கோலியாவின் கிழக்கு உஜ்ம்கியுன் பேனரில் …

Continue reading “ஓநாய் குலச்சின்னம் – அழிந்த தொன்மை கலாச்சாரத்தின் சிற்பம்..”

  • மதிப்புரைகள்

வா. மணிகண்டனின் மூன்றாம் நதி நாவல் குறித்து

December 2, 2017 / thuyan / 0 Comments

பெருநகரத்தின் குரூர முகம் வா. மணிகண்டனின் மூன்றாம் நதி நாவல் குறித்து ‘எந்த அயோக்கியன நம்பினா மேல்? தண்ணிக்காக ஊரையே பறக்க அடிச்சிட்டீங்’ –அசோகமித்திரனின் தண்ணீர் நாவலிலிருந்து பெருநாவல்கள் மட்டுமே வாசிப்பின் எல்லைகளையும் மனிதின் சித்திரங்களையும் கொடுக்குமென்றால் சிறிய நாவல்களிலும் அத்தகைய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. பக்க அளவில் ஒரு படைப்பபை பிரக்ஞை பூர்வமாக எதிர்கொள்வதில் சிக்கல்கள் இருக்கின்றன. டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ போன்ற நாவல்களை வாசிக்கின்ற அதே உத்வேகம் தான் ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’வையும் வாசிக்கின்றபோது …

Continue reading “வா. மணிகண்டனின் மூன்றாம் நதி நாவல் குறித்து”

Posts pagination

Previous 1 2 3 4 Next

Recent Posts

  • Author
  • வன்புணர்வுக் காணொளிகள் மூலம் சம்பாதிக்க நிறுவனங்கள் எப்படி அனுமதிக்கப்படுகின்றன?
  • நாவல் எனும் கலை வடிவம்
  • மௌனங்களை நாம்தான் உற்றுக்கேட்க வேண்டும்
  • 100th death of Priest Francis Xavier

Recent Comments

  • சா.ரு.மணிவில்லன். on ஓநாய் குலச்சின்னம் – அழிந்த தொன்மை கலாச்சாரத்தின் சிற்பம்..
  • தூயனின் இரு கதைகள் – கடலூர் சீனு on முகம்
  • SHAN Nalliah on இன்னொருவன்

Archives

  • April 2024
  • March 2024
  • February 2024
  • September 2023
  • October 2022
  • September 2022
  • December 2021
  • February 2018
  • December 2017
  • November 2017

Categories

  • Author
  • English
  • கட்டுரைகள்
  • குறுநாவல்
  • சிறுகதைகள்
  • புத்தகங்கள்
  • மதிப்புரைகள்
  • மொழிபெயர்ப்புகள்

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

Theme by The WP Club | Proudly powered by WordPress